யோகாசனத்தில் சாதனை புரிந்த மாணவி

விருதுநகரில் யோகாசனத்தில் சாதனை புரிந்த மாணவியை பாராட்டினர்.;

Update:2022-02-27 00:54 IST
விருதுநகர், 
விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் முன்னிலையில்  முதல் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ சம்யுக்தா நோபல் சாதனை பதிவிற்காக 40 நிமிடம் நாற்காலியில் வாம தேவாசனம் செய்தார். இதுவரை வாமதேவாசனம் நாற்காலியில் இவ்வளவு நேரம் யாரும் செய்ததில்லை என்று பயிற்சியாளர் மாலினி தெரிவித்தார். சாதனை புரிந்த மாணவியை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்