நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு 2 ஆயிரம் டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-03-06 18:30 GMT
நீடாமங்கலம்:-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருச்சிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையர்நத்தம், தெற்குநத்தம், அசேஷம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 2 ஆயிரம் டன் நெல் 150 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 40 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத்தொடர்ந்து நெல் அரவைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்