ஆனைமலை திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-03-09 20:10 IST
பொள்ளாச்சி

ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

திருக்கல்யாணம்

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 இதையொட்டி 70 அடி உயர மூங்கில் கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த நிலையில் 8-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு மூலவருக்கும், அதை தொடர்ந்து 10 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மணக்கோலத்தில் தர்மராஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருத்தேர் வடம் பிடித்தல்

வருகிற 14-ந் தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடுகிறது. 17-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடக்கிறது. 18-ந்தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 19-ந்தேதி காலையில் நடக்கிறது. இதைதொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், 20-ந்தேதி திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் நடக்கிறது. 21-ந்தேதி காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்