வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடல்
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை மதியம் 1 மணி வரை மூடப்படுகிறது.
வண்டலூர்,
சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாக காரணங்களுக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணி வரை மூடப்படுகிறது. மதியம் 1 மணிக்கு பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.