கோவை
கோவையில் நேற்று 4 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். இதில் கோவை நகரை சேர்ந்தவர்கள் 3 பேர், புறநகரை சேர்ந்தவர்கள் ஒருவர் ஆவார்கள்.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 893 ஆனது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.
இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 79 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.