ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் நகையை திருடிய வாலிபர் கைது

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சின் நகையை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-03-20 10:20 GMT
சென்னை வில்லிவாக்கம் வைகை தெருவை சேர்ந்தவர் சுப்பு லட்சுமி (வயது 35). இவர், ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிறுநீரகவியல் வார்டில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ந்தேதி இவருடைய 2 பவுன் சங்கிலி திருட்டுபோனது.

இதுபற்றி சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ைவத்து மயிலாப்பூர் நாட்டான் தோட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலமுருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்