மீன் பிடித்த போது வலையில் கால் சிக்கி விபரீதம்: கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

மீன் பிடித்த போது வலையில் கால் சிக்கியதால் கடலில் தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-23 10:09 GMT
திருவொற்றியூர்,  

திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 51). மீனவரான இவர், நேற்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஐயப்பன், ஆறுமுகம் உள்பட 6 பேருடன் ஆந்திரா நோக்கி மீன் பிடிக்க கடலில் சென்றனர். இந்த நிலையில், பழவேற்காடு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் இருந்த வலையில் கால் சிக்கியதில் கடலுக்குள் விழுந்த ஆறுமுகம் மூச்சு திணறி இறந்து போனார். 

இதையடுத்து அவரது உடலை மீட்ட சக மீனவர்கள், போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்