கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது;

Update:2022-03-28 22:41 IST
கஞ்சா விற்ற 2 பேர் கைது
கணபதி
கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரத்தினபுரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது24), சிவானந்தாகாலனி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (21) ஆகிய 2 பேரையும் போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்