கோவை
கோவையில் நேற்று 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 925 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 286 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 22 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.