சங்கராபுரம்,
சங்கராபுரம் பஸ்நிலையத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு .ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் திலகவதிநாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி துரை, முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் தயாளமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் துரைதாகபிள்ளை அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தலைமை கழக பேச்சாளர்கள் சாதிக், பிரபாகரன் ஆகியோர்கள் சிறப்புரையாற்றினர். மேலும் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வேட்பாளர்களை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் கட்சி நிர்வாகிகள் பேசினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் வக்கீல் பாலஅண்ணாமலை, முருகன், கமருதீன், சங்கர், முனுசாமி, மாவட்ட கவுன்சிலர் சுகன்யா சுரேஷ், நகர நிர்வாகிகள் செங்குட்டுவன், ரவி, கோகுலகுமார், கோவிந்தன், அப்பு, கிருபா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.