சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update:2022-04-13 14:43 IST
செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு மாவட்டம் ஈஷா பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் இரோணிமோஸ் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளியின் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து போக்சோ கோர்ட்டு நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் வக்கீல் புவனேஸ்வரி ஆஜரானார்.

மேலும் செய்திகள்