நகை திருடிய பெண் கைது
கோவை போத்தனூர் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.;
கோவை
போத்தனூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவர் வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி (28) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.