கிணத்துக்கடவில் உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயியால் பரபரப்பு

கிணத்துக்கடவில் உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2022-04-17 19:43 IST
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை மிரட்டல்

கிணத்துக்கடவில் கோவை- பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் விவசாயி மளமளவென மேலே ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. பொதுமக்கள் மின்கம்பம் மீது ஏறிய நபரை கீழே இறங்க கூறி சத்தம் போட்டனர். இதனையடுத்து ஒரு வழியாக அந்த நபர் கீழே இறங்கினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு கிணத்துக்கடவு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். 

போலீசார் அறிவுரை

விசாரணையில் அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (வயது 70) என்பதும், இவர் காளியண்ணன் புதூரில் உள்ள ஒரு கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது. 
இந்த பகுதியில் இவரது உறவினர் ஒருவர் ஜெகநாதனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் மின்கம்பத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெகநாதனுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். விவசாயி ஒருவர் உயாமின் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்