மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Update: 2022-04-19 16:28 GMT

மந்தாரக்குப்பம்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் 2 முன்பு வசித்து வருபவர் பழமாலை (வயது 60). பெரியாகுறிச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். இவர் உணவகத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்