பிரதமர் மோடி உருவப்படம் வைக்கப்பட்டது
பிரதமர் மோடி உருவப்படம் வைக்கப்பட்டது;
ஆனைமலை
ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடி உருவப்படம் வைக்கப்படும் என்று பா.ஜனதா சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடி உருவப்படத்தை பா.ஜனதாவினர் வைத்தனர். அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமர் மோடி உருவப்படம் வைக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.