கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்
கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்;
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் பள்ளிவாசல் அருகில் வசித்து வந்தவர் சாலமன் ராஜ் (வயது50). பெயிண்டர்.
இவருக்கு சரஸ்வதி பிரேமா என்ற மனைவியும், ஐஸ்வர்யா என்ற மகளும், விபின் ராஜ் என்ற மகனும் உள்ளனர்.
சாலமன் ராஜ் கடந்த 20 -ம் தேதி இரவு காந்திபுரம் பகுதியில் பெயிண்டிங் வேலையை முடித்து விட்டு வடசித்தூரில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவர், கொண்டம்பட்டி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாலமன் ராஜ் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.