விஷம் குடித்து முதியவர் தற்கொலை

காஞ்சீபுரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்தார்.

Update: 2022-04-24 08:27 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே அங்கம்பாக்கம் கிராமம் மல்லிகா புரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 70). இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் மனமுடைந்த ராஜேந்திரன் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்