கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
கோவை
கோவில்களை காப்போம், கோவையையும் காப்போம் என்ற தலைப்பில் இந்து முன்னணி சார்பில் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையொட்டி முருகன், லட்சுமி, காளி உள்பட கடவுள்களின் வேடங்களை அணிந்து சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.