சந்தவாசல் அருகே மலையில் பெண் பிணம்

சந்தவாசல் அருகே மலையில் நிர்வாணமாக பெண் பிணம் கிடந்தது. கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-24 16:18 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலை அடுத்த எட்டிவாடி வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள மலையில் நிர்வாணமான நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். 

இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் சந்தவாசல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணமாக கிடந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிணமாக கிடந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா, அவரை யாரேனும் கடத்தி வந்து கொலை செய்து மலையில் வீசி சென்றார்களா? என்பது குறித்து சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்