குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு

ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருவார வழிபாடு நடந்தது.

Update: 2022-05-05 18:30 GMT
நீடாமங்கலம்:-

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் ேகாவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரக தலங்களில் குருபகவானுக்குரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலி அம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டனர்.
இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களிலும் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

மேலும் செய்திகள்