கொண்டப்பநாயக்கன்பட்டியில் ஆசிரியை, மகளுடன் மாயம்

கொண்டப்பநாயக்கன்பட்டியில் ஆசிரியை, மகளுடன் காணாமல் போனார். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-05-06 22:29 GMT
கன்னங்குறிச்சி:
கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தீபிகா (வயது 32). கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து விட்டார். இவர் தனது மகள் தனிஷ்காவுடன் (11), அண்ணன் சீனிவாசன் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் தீபிகா, டால்மியா போர்டு அருகே உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மகள் தனிஷ்கா தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்நிலையில் தீபிகா மற்றும் தனிஷ்கா பள்ளிக்கு செல்வதாக கூறிச்சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து காணாமல் போன தனது தங்கை, மற்றும் தங்கை மகளை கண்டுபிடித்து தருமாறு சீனிவாசன் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்