உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து வழிபடும் பெற்றோர்

காஞ்சீபுரத்தில் உயிரிழந்த மகனுக்கு சிலை அமைத்து பெற்றோர் வழிபாடு செய்தனர்.

Update: 2022-05-11 16:59 GMT
காஞ்சீபுரம்,  

காஞ்சீபுரம் வேதாசலம் நகரில் வசித்து வருபவர் கருணாகரன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகன் ஹரிஹரன் (வயது 48). செவிலிமேடு ஊராட்சியில் தி.மு.க. கவுன்சிலராக இருந்துள்ளார்.

இவர் கடந்த 2021-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி வீட்டுக்கு அருகிலேயே பெற்றோர்கள் சிறிய கோவில் ஒன்றை கட்டி அதில் மகனின் சிலையை வடிவமைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

மேலும் செய்திகள்