200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருக்கோவிலூர் அருகே 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Update: 2022-05-15 16:27 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி கிராம பகுதியில் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வீரபாண்டி கிராம பகுதியில் சாராய வேட்டை நடத்தினர். அப்போது ஒட்டம்பட்டு கல்லாங்குத்து பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 200 லிட்டர் சாராய ஊறல்  பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் அதை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சியவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்