ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்;
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனைக்குழு கண்காணிப்பாளர் திருமுருகன் தலைமையில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 31 விவசாயிகளின் 1 லட்சத்து 22 ஆயிரத்து 905 தேங்காய்கள் 45 குவியலாக ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ.8.53-க்கும் குறைந்தபட்சமாக ரூ.6.03-க்கும் சராசரியாக ரூ.6.44-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.7.92 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் 8விவசாயிகளின் 551 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக ரூ.82.18, குறைந்தபட்சமாக ரூ.60.10-க்கு சராசரியாக ரூ.77.94 ஏலம் போனது. இதனால் ரூ.42,906 கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் சீனிகுருசாமியை தொடர்பு கொள்ளலாம்.