கயத்தாறில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்

கயத்தாறில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-05-18 10:25 GMT
கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பேரிடர் மீட்புக்குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முதல் நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சிக்கு தாசில்தார் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். இதில் சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்தன், பானு, கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமிராஜதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், போலீசார், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும்  முதல் நிலை தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்