லாரி மோதி தொழிலாளி பலி

கடையம் அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;

Update:2022-05-18 18:49 IST
கடையம்:
கடையம் அருகே உள்ள காக்கநல்லூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 47). கூலி தொழிலாளியான இவர் நேற்று காலை ஆழ்வார்குறிச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு தனது ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கல்லிடைக்குறிச்சியில் இருந்து இடைகால் நோக்கி வந்த லாரியும், அவரது மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் பரமசிவன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் ஆழ்வார்குறிச்சி போலீசார் வந்து. பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் மாரியப்பனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்