பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்

Update: 2022-05-18 16:18 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 742 கிலோ தேங்காய்களை ‌விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.00-க்கும், சராசரியாக ரூ.25.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 348-க்கு வர்த்தகம் நடைபெற்றது. 
இந்த வாரம் நடைபெற்ற ‌ஏலத்திற்கு 11 ஆயிரத்து 165 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.26.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ20.20-க்கும், சராசரியாக ரூ.‌24.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 230-க்கு தேங்காய் ஏலம் போனது. தேங்காய் விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்