நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வெறிச்சோடிய ஜமாபந்தி

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி வெறிச்சோடியது.

Update: 2022-05-18 16:39 GMT
ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமை தாங்கினார்.  கொத்தூர், சொரக்காயல் நத்தம், நாயனசெருவு, தோப்பலகுண்டா, கத்தாரி, ஆத்தூர்குப்பம், நாட்டறம்பள்ளி, கே.பந்தரபள்ளி, பச்சூர், குடியானகுப்பம், சின்ன மோட்டூர், திரியாலம், உள்ளிட்ட 13 கிராமங்களிலிருந்து உள்ள பொது மக்களும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் போதிய ஏற்பாடுகள் இல்லாததால் நாற்காலிகள் காலியாக இருற்தன.  இதனால் நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்