சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை: மு.க ஸ்டாலின் பேட்டி

சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2019-05-14 02:07 GMT
சென்னை, 

சென்னை விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மு.க ஸ்டாலின் கூறியதாவது:- “ தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை. 

சந்திரசேகர ராவ் ஆலயங்களுக்கு செல்லவே தமிழகம் வந்தார். சந்திரசேகர ராவுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் 3-வது  அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மேலும் செய்திகள்