13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணி இடமாற்றம்

13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-08-06 16:11 GMT

பெங்களூரு: பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய ரீனா சுவர்ணா, எலகங்கா மண்டலத்தில் பணியாற்றிய மஞ்சுநாத், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் பணியாற்றிய லட்சுமி நாராயண் உள்பட 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 13 பேரும் ஒரே பகுதியில் நீண்ட நாட்களாக பணியாற்றி வந்ததால், பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்