காஷ்மீரில் பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2017-01-19 20:49 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் உள்ள ஹஜின் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சிறப்பு அதிரடிப்படை வீரர்களும், போலீசாரும் அந்த பகுதிக்கு விரைந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் பயங்கரவாதி ஒருவர் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதி என்பதும், அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

முன்னதாக, இந்த துப்பாக்கிச்சண்டையின் போது போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்