கெஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் அன்னா ஹசாரே கருத்து

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

Update: 2017-04-26 09:48 GMT
புதுடெல்லி,

டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி பெறும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை பெற்றுள்ளது. 
பா.ஜனதா வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ், மூன்றாவது இடத்தில் ஆம் ஆத்மி கட்சி தள்ளிவிடப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து சமூல ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது:

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது கவலை அளிக்கிறது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.  ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுபினர்கள் செய்த ஊழலே தோல்விக்கு காரணம். கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்