நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்திற்குள்ளானது.

Update: 2017-04-26 15:49 GMT
சுக்மா,

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 10 நக்சலைட்டுகள் அதிரடியாக சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுக்மா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் தேடும் வேட்டையில் கோபுரா கமாண்டோ படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் சிண்டாகுப்பா என்ற வனப்பகுதியில் இறங்கும் போது திடீர் விபத்திற்குள்ளானது. இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்