சாய்பாபாவுக்காக 2 கிலோ தங்க பாதுகையை வழங்கிய பெண் பக்தர்

சீரடி சாய்பாபாவுக்காக 2 கிலோ தங்க பாதுகையை பெண் பக்தர் ஒருவர் வழங்கி உள்ளார்.;

Update:2017-07-08 17:38 IST
மும்பை,

சீரடி சாய்பாவா கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த சந்தியா குப்தா, சீரடி சாய்பாவுக்கு இன்று தங்க பாதுகை வழங்கி உள்ளார். 

இது குறித்து சந்தியா குப்தா கூறியதாவது:

எனது குருவிற்கு என்னால் முடிந்த சிறிய அளவிலான குரு தட்சணை. என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குரு பூர்ணிமா விழாவையொட்டி  சீரடியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். சாய்பாபா கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்