உத்திரபிரதேசத்தில் மீண்டும் ரெயில் தடம் புரண்டு விபத்து 75 பேர் காயம் என தகவல்

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Update: 2017-08-23 00:28 GMT
லக்னோ,

உத்தரபிரதேசத்தில் அதிகாலை 2.30 மணி அளவில் கைபியத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் ஆரையா அருகே தடம் புரண்டன.  ரெயில் விபத்தில் 75க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் செய்திகள்