இமாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
இமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சம்பா,
இமாச்சல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் இன்று மாலை 4.36 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை. தொடர்ந்து மூன்று முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.இமாச்சல பிரதேசத்தில் கடந்த 1095-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 20,000 -க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.