பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி வாக்கில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 17 ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 11–ந்தேதி வரை நடைபெற்றது.
அடுத்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 20 ந்தேதி தொடங்குகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் கூட்டத்தொடரை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. கூட்டத்தொடரின் தேதிகள் குறித்து அமைச்சரவை குழு ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும்.என தகவல்கள் வெளியாகி உள்ளது.