காங். கட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதியே 2 ஜி வழக்கு -ஆ.ராசா பேட்டி
நல்ல திட்டங்களை வழங்கிய காங். கட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதியே, 2 ஜி வழக்கு என்று முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா கூறியுள்ளார். #Congress #ARaja
புதுடெல்லி,
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ, விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் ஆ.ராசா- கனிமொழி உள்பட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் செய்தியார்களிடம் ஆ.ராசா கூறியதாவது:
என் தரப்பு நியாயத்தை பதிவு செய்யவே 2ஜி பற்றிய புத்தகத்தை எழுதினேன். நல்ல திட்டங்களை வழங்கிய காங். கட்சியை வீழ்த்த நடத்தப்பட்ட சதியே, 2 ஜி வழக்கு. 2-ஜி வழக்கில் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளும் சரியென கூற முடியாது. தீர்ப்பில் பிழைகள் இருந்ததுக்கு சிஏஜி தான் காரணம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மெளனம் வருத்தம் அளித்தது. 2-ஜி வழக்கில் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளும் சரியென கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
#ARaja | #Congress | #2GCase | #ManmohanSingh | #PChidambaram