சாத்தூர் அருகே ராமசந்திரபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-05-13 09:48 GMT


சாத்தூர்,

சாத்தூர் அருகே ராமசந்திரபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள் சிக்கியது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சென்றுவிட்டு திரும்பிய போது இந்த விபத்து சம்பவம் நேரிட்டு உள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். 10 பேர் காயம் அடைந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது. கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது நேரிட்ட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்