கோவாவில் காதலன் கண்முன்னே இளம்பெண் கற்பழிப்பு 3 பேர் கைது

தெற்கு கோவாவில் உள்ள செர்னாபடிம் கடற்கரைக்கு 20 வயது இளம்பெண் தனது காதலருடன் சென்றார்.

Update: 2018-05-26 22:27 GMT

பனாஜி, 

தெற்கு கோவாவில் உள்ள செர்னாபடிம் கடற்கரைக்கு 20 வயது இளம்பெண் தனது காதலருடன் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் கத்தி முனையில் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அந்த இளம்பெண்ணை 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து காதல் ஜோடி கொல்வா போலீசில் புகார் அளித்தனர். அந்த இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சீவ் தனஞ்செய் பால் (23), ராம் சந்தோஷ் பரியா (19), விஷ்வாஸ் மக்ரானா (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது இளம்பெண்ணை கற்பழித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செய்திகள்