காவிரி விவகாரம்: சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கப்படும் - கர்நாடக துணை முதலமைச்சர்

காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் சட்டத்திற்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறி உள்ளார். #Cauveryissue #

Update: 2018-06-09 11:21 GMT
பெங்களூர்

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள விதான் சவுதாவில் ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மற்றும் சட்டத்திற்குட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் செய்திகள்