மகாரஷ்டிரா: சாலை விபத்தில் பாஜக தலைவர் உயிரிழப்பு

மகாரஷ்டிராவில் சாலை விபத்து ஒன்றில் பாஜக தலைவர் உயிரிழந்தார்.

Update: 2018-08-28 02:26 GMT
பிவாண்டி,

தானே மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி இருந்து வருகிறார்.

இந்நிலையில் பிவாண்டியில் செராவாலி கிராமம் அருகே நேற்று மாலை 6 மணி அளவில் அவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது 9 தொழிலாளர்களை ஏற்றிகொண்டு தனியார் மினி பேருந்து ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த தனியார் மினி பேருந்து குருநாத் காரின் மீது பலமாக மோதியது. இதில் அவர் பயணம் செய்த கார் பயங்கரமாக சேதமடைந்தது. இதில் குருநாத் சம்பவ இடத்திலே பலியானார்.

இந்த சம்பவம் நடந்த பின், மினி பேருந்தை ஓட்டி வந்த அதன் ஓட்டுநர் தலைமறைவானார். பின்னர் தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார், குருநாத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான மினி பேருந்தின் ஓட்டுநர் மீது 304(ஏ), 184 மற்றும் 279 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஓட்டுநரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்