உத்தரபிரதேசம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. மரணம்
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மரணமடைந்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் ஹெகரி மாவட்டத்தில் உள்ள நிகாசன் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராம்குமார் வர்மா(வயது64). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
மரணம் அடைந்த ராம்குமார் வர்மாவின் உடல் அடக்கம் சொந்த ஊரில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.
மறைந்த எம்.எல்.ஏ, ராம்குமார் வர்மா 1991-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சியில் பொதுப்பணித்துறை மந்திரியாகவும், 1997-ம் ஆண்டு கூட்டுறவுத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் ஹெகரி மாவட்டத்தில் உள்ள நிகாசன் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராம்குமார் வர்மா(வயது64). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
மரணம் அடைந்த ராம்குமார் வர்மாவின் உடல் அடக்கம் சொந்த ஊரில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.
மறைந்த எம்.எல்.ஏ, ராம்குமார் வர்மா 1991-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சியில் பொதுப்பணித்துறை மந்திரியாகவும், 1997-ம் ஆண்டு கூட்டுறவுத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மாநில பாரதீய ஜனதா தலைவர் டாக்டர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.