உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து ; 5 பேர் பலி, பலர் காயம்

உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலி, பலர் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2018-10-10 02:40 GMT
ரேபரலி, 

உத்தர பிரதேச மாநிலத்தின் ரேபரலி அருகே ஹர்சந்த்பூர் ரயில்வே நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில், நியூ பரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில்  பயணிகள் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வாரணாசியில் இருந்து மீட்புக்குழு விரைந்துள்ளது. ரயில் விபத்து நடைபெற்ற இடத்திற்கு ரயில்வே வாரிய தலைவர் அஷ்வினி லோஹனி விரைந்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து செய்ய வேண்டும் ,தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்