மதன்லால் குரானா மரணம்: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

மதன்லால் குரானா மறைவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-10-28 22:00 GMT
புதுடெல்லி,

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி மதன்லால் குரானா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.

அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்பட தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில், “டெல்லி முன்னாள் முதல்-மந்திரி மதன்லால் குரானா இறந்த செய்தி கேட்டு துயரம் அடைந்தேன். அவர் பொதுவாழ்வுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்” என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “மதன்லால் குரானா மறைவால் கலங்கி போனேன். அவர் டெல்லியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். எனது எண்ணங்கள் எல்லாம் அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை கவர்னர் அனில் பைஜல், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் மதன்லால் குரானா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்