கஜா புயல்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் நாராயணசாமி பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

Update: 2018-11-17 09:40 GMT
சென்னை,

கஜா புயலின் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து புதுவை அரசு சார்பில் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஜா புயல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியார்களிடம் கூறியதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு இடைக்கால நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்காலில் 70% பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். புயல் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்