கொல்கத்தாவில் தி-42 என்ற அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் தி-42 என்ற அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2018-11-17 13:33 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சவுரங்கி என்ற தி-42 என்ற அடுக்குமாடி கட்டடத்தின் 7 மற்றும் 8வது மாடியில்  திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கொல்கத்தாவில் மிக உயரமான குடியிருப்பில் கட்டுமான பணி நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்