உத்தரகாண்ட்: உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் பஸ் கவிழுந்து விபத்து 2 பேர் பலி 14 பேர் காயம்

உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் பஸ் கவிழுந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-11-18 13:18 GMT
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் உள்ள டெந்தா அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மினி பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்