குஜராத் எம்.எல்.ஏ. மேவானி மற்றும் கன்னையா குமார் மீது மை வீச்சு

குஜராத் எம்.எல்.ஏ. மேவானி மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பு தலைவர் கன்னையா மீது மை வீசிய இந்து சேனாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-11-19 13:41 GMT
குவாலியர்,

குஜராத்தில் வத்காம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி.  ஜவகர்லால் நேரு பல்கலை கழக முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார்.  இவர்கள் இருவரும் குவாலியர் நகரில் நடந்த இந்திய அரசியலமைப்பினை பாதுகாப்போம் என்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த கருத்தரங்கு ஒன்றில் இன்று கலந்து கொள்ள சென்றனர்.

இந்த நிலையில், இந்து சேனா அமைப்பினை சேர்ந்த முகேஷ் பால் என்பவர் இருவர் மீதும் மையை வீசியுள்ளார்.  இதில் கருத்தரங்கில் உரையாற்ற இருந்த அவர்கள் சட்டையில் கறை படிந்தது.  அதன்பின் கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு தோமர் முன்னிலையில் அவர்கள் உரையாற்றிய காட்சிகள் வீடியோ பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில் முகேஷ் கைது செய்யப்பட்டார்.  மேவானி மற்றும் குமார் ஆகிய இருவரின் உருவ பொம்மைகளை எரித்ததற்காக நேற்று 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்