மராட்டியம்; ராணுவ தளவாட மையம் அருகே வெடி விபத்து: 6 பேர் பலி, பலர் காயம்

மராட்டிய மாநிலத்தில் ராணுவ தளவாட மையம் அருகே வெடி விபத்து ஏற்பட்டது.

Update: 2018-11-20 05:17 GMT
புதுடெல்லி,
 
மராட்டிய மாநிலம் வர்தா மாவட்டத்தில் உள்ள பல்கன் பகுதியில், ராணுவ குடோன் உள்ளது.  இந்தநிலையில், இந்த சேமிப்பு கிடங்கில் இன்று காலை வெடிமருந்து பொருட்களை இறக்கி வைக்கும் பணி நடந்து வந்தது. ஒப்பந்த தொழிலாளர்கள் 15 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

வெடிமருந்துகள் அடங்கிய பெட்டிகளை தொழிலாளர்கள் இறக்கி வைத்தபோது, ஒரு பெட்டி  திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பெட்டிகளை இறக்கி வைக்கும் பணியை செய்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக அங்கிருந்துவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வெடிமருந்து வெடிப்பில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில் பலத்த காயமடைந்த 6 பேர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயமடைந்த மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வெடி விபத்து காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்